வீதியோடு போகிற வில்லங்கத்தை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் கொண்டு செல்வதில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கில்லாடி.! 26 வருட அனுபவம் இருந்தாலும் ஆளை அளப்பதில் அவ்வளவாக சமத்து இல்லை. ஆள் பருமனாக இருந்தாலும் சவலைபிள்ளை!
அண்மையில் இவர் மாட்டிகொண்டது பிங்கி ப்ரொடக்ஷன் பியாரிலாலிடம்! கிரிமினல் கேஸ் போட்டுவிட்டார் பியாரி!
என்ன நடந்தது என்று கேட்டதும் சற்று சீரியசாகிவிட்டார் ஷக்தி!
“எனக்குப் படம் பண்ணிக் கொடுங்கன்னு பியாரிலால் வந்தார். ‘ஜெயிக்கிற குதிரை’ என்கிற பெயரில் ஜீவனை வைத்து எடுத்தேன். அந்த குதிரை என்னை கீழே தள்ளி குழியும் பறிக்கும்னு நினைக்கல. பாதியிலேயே தன்னால பணம் புரட்ட முடியல .வேற யாரையாவது போட்டு படத்தை முடிங்க. செலவான பணத்தை படத்தின் ரிலீஸ் போது கொடுத்தா போதும்னார். நானும் சத்யமூர்த்தி என்கிற பைனான்சியரிடம் பத்து லட்சம் வாங்கி பியாரிலாலிடம் கொடுத்து விட்டேன்.
ஆனா ஆளை வைத்து மிரட்டி என்னிடம் இருந்த டாக்குமேன்ட்ஸ்களை எடுத்திட்டுப் போய் என் மேலேயே கேஸ் போட்டார்.நீதி ஜெயிக்கும்னு படங்களில் சொல்வோம்.அது உண்மைதான் என்பதை நீதிபதி பி.என் பிரகாஷ் தீர்ப்பு சொல்லுது.என் மீது எந்த வழக்கும் தொடரக்கூடாதுன்னு தீர்ப்பு வந்திருக்கு”என்றார்.
பார்த்து ஷக்தி.பாம்பு மறுபடியும் தலையை தூக்கப்போகுது!
படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லிங்க!