‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ‘ என ஆண் ஆதிக்கத்தினால் உருவாக்கப்பட்ட சொல்வழக்கு பெரும்பாலும் உண்மையாவது ஆண்களினால்தான்!
புகழ் வாய்ந்த ஒரு கலைஞனை வீழ்த்துவதற்காக இரண்டு சேனல்களும் ஒரு இயக்குநரும் இணைந்து ஒரு நடிகையை துகில் உரியவைத்து வீதியில் வேடிக்கைக் காட்டினார்கள்.
மக்கள் செல்வாக்கு உள்ள அந்த நடிகன் பவன் கல்யாண். அரசியல் கட்சியின் தலைவர்.அவரை குறி வைத்தவர் ராம் கோபால் வர்மா.
டுவிட்டர் வழியாகவும் சேனல்கள் வழியாகவும் தாக்குதல்.!
பவன் கல்யாணுடன் நில்லாமல் தாயையும் இழிவு படுத்த, தாங்குவானா மகன்?
“நான் ஒரு நடிகன்,அல்லது அரசியல் கட்சித் தலைவன் என்பது எனக்கு இரண்டாம் பட்சம்!
முதலில் நான் ஒரு மகன்.அவனால் தாயின் கவுரவத்தை காப்பாற்றமுடியவில்லை என்றால் வாழ்ந்து என்ன பயன்? மரணிப்பதே மேல்!” என பொங்கி இருக்கிறார்.
அவரது ரசிகர்களும் பொங்கி இருக்கிறார்கள். என்ன நடக்குமோ?