சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறவர்கள் எல்லாம் “என்னிடம் அதைப் பேசினார். இப்படி அரசியலில் நடந்து கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் அலசினார்…இப்படி பலவித ‘அள்ளல்’களை கொட்டிவிடுவார்கள். அதற்கென காத்திருக்கும் ஊடகங்களும் பில்டப் பண்ணி போட்டுவிடுகின்றன. ஆனால் உண்மையில் அவர்களுடன் எதுவும் பேசி இருக்க மாட்டார். தமிழருவி மணியனோ,இன்னும் பல பிரமுகர்களும் ரஜினி மன்றத்தினரின் அபீசியல் ஸ்போக்ஸ் மென் இல்லை என்பதுதான் கற்பூர உண்மை.
அண்மையில் பிஜேபியின் தூதர் குருமூர்த்தி ஒரு மணி நேரம் ரஜினியிடம் பேசி இருக்கிறார். பேசியதில் அழுத்தம் கொடுக்கும் பாங்கு இருந்தது என்பதாக சொல்கிறார்கள்.
ஆனால் ரஜினியிடம் இருந்து எவ்விதமான பதிலும் கிடைக்க வில்லையாம்
ரஜினி அமேரிக்கா சென்றிருப்பது உடல்நல சோதனைக்காகத்தான்!. இன்று வெள்ளிக்கிழமை அங்குள்ள நெல்லையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரை சந்தித்து பேசி இருக்கிறார். சில மருத்துவ சோதனைகளுக்குப் பின்னர் வர்ஜீனியாவில் இருக்கிற சுவாமி சச்சிதானந்தா சுவாமிகளின் விரிந்து பரந்த ஆசிரமத்தில் தியானம் செய்கிறார்.மூன்று நாட்கள் அந்த ஆசிரமத்தில் தங்குவார்கள் என எதிர்பார்க்கிறார்கள்.
அந்த ஆசிரமத்தின் பெயர் லோட்டஸ். ” அடடே பிஜேபியின் சின்னம். அதான் அங்கே தங்குகிறார் ,கண்டிப்பாக அவர் காவியின் பக்கம்தான்!”என கட்டி விடக்கூடும்.
ஆனால் அவர் பிஜேபியின் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அப்படி நடந்தால் நல்லதுதான்!