“கவர்ச்சியாக நடிப்பிங்களா” என்று கேட்டாலே “அபச்சாரம் அபச்சாரம்” என காதுகளை மூடிக் கொள்ளும் நடிகைகளை பார்த்து பழகிப் போன நமக்கு தற்போதைய நடிகைகளின் பேச்சைக் கேட்டால் அடி வயிற்றில் அக்கினி பந்து சுழல்கிறது. ‘அறுத்து எறி, ஆளை காலி பண்ணு ‘என்கிற ரேஞ்சில் பேட்டியைத் தட்டுகிறார்கள்.
50 வயது குண்டூர் ஆசாமி சுப்பையா என்கிற ‘நல்ல யோக்கியன்’ ஒன்பது வயது சிறுமியை ரேப் பண்ணி விட்டு தப்பி ஓடி விட்டான். மயக்கம் அடைந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள். அந்த நல்லவனை தற்போது தேடி வருகிறார்கள்.
‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உன்னைப்போல் ஒருவன்’ ‘பயணம்,’ வெடி’, என் வழி தனி வழி’.’நாயகி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிற பூனம் கவுரிடம் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதும் நெற்றிக்கண்ணை திறக்காத குற்றம்தான்!
“சில மனித மிருகங்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் எப்படி அவர்களை விட்டு வைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. அந்த சிறுமியை சீரழித்தவனை பகிரங்கமாக பத்து பேர் முன்னிலையில் தூக்கில் போடா வேண்டும். இல்லையா அந்த மிருகத்தின் உறுப்புகளை அறுத்து எறிய வேண்டும். இதுதான் சரியான தண்டனை” என்கிறார் பூனம் கவுர்.