அவனவன் வயிற்றில் குமிட்டி அடுப்பைக் கட்டிக்கொண்டு படத்தைப் பார்த்து வெந்து போகிறான் . ஆரம்பத்தில் மூங்கில் சிக்கன் வாங்கிக் கொடுத்து காதலுக்கு வலிமை ஏற்றினார் நயன்தாரா. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு. ஒரு ஆளை விமானத்தில் ஹைதராபாத்துக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து மூங்கில் சிக்கன் சென்னைக்கு வந்து பிறகு பாண்டிச்சேரிக்கு செல்லும்! அப்படியெல்லாம் வளர்ந்த காதல் அய்யா, புனித காதல்!
கல்யாணமே நடக்காதா, இப்படியே காதலுடன்தான் கடைசி வரை வாழ்க்கையா?
அப்படியெல்லாம் இல்லை.
“இந்த வருஷம் நடக்கவேண்டும் ” என்பது நயனின் பெற்றோர்கள் கட்டளை என்கிறார்கள்.