அடியே ,பழுத்த பழம் தித்திக்குமடி,அந்த பாழும் காயெல்லாம் கசக்குமடி” என்று விருத்தனாக வந்து அந்த வேல்முருகன் வள்ளியை கல்யாணம் செய்திருக்கிறபோது 52 வயதான அரை கிழவனை இளம் வயதுப் பாடகி காதலிக்கக்கூடாதா? சல்மானை அரை கிழவன் என்பதே தப்பு..
“கட்டுமஸ்தான உடல். இன்னும் கல்யாணம் ( !) நடக்கவில்லை. அவரை காதலிப்பதோ உடனிருப்பதோ பாவமா?” என்று கேட்கிறார் லுலியா.ருமேனிய பாடகி. ஓராண்டுகாலமாக சல்மானுடன் நட்புறவில் இருக்கிறார். குடும்பத்துக்கும் வேண்டிய பொண்ணு.
ஆனால் சல்மானை பொருத்தவரை இந்த பாடகி வெறும் நண்பி என்பதாகவே கருதுகிறார். அவரது வாழ்க்கை பல பெண்கள் வந்து போன கனவாகி விடக்கூடாது என சில ஹீரோயின்கள் நினைக்கிறார்கள்!