இதுவும் அந்த ‘ஆண்டவன் ‘செயல்தான்!
அரசு அதிகாரிகளின் ‘அலட்சிய’ நடவடிக்கையில் இது போன்ற அவலங்கள் நாடெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வெளிச்சத்துக்கு வருவது என்னவோ சிலதான்!
“கழுதைப்பால் குடிச்சா நல்லது “என்று குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களில் சங்கில் வைத்து கொஞ்சம் புகட்டுவார்கள்.
அதற்காக அந்த கழுதையே நமக்கு தாசில்தாராக வந்து நாட்டாமை பண்ணினால் நல்ல இருக்குமா?
காஷ்மீரில் அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வு நடந்தது.
அதில் தேர்வு எழுதுவதற்கு ஒருவருக்கு அனுமதி.
காதுகள் உயர்ந்து மூக்குகள் வெளுத்த அந்த பிரமுகரின் பெயர் கச்சூர் கவுர். அப்படின்னா சாம்பல் வண்ண கழுதை என அர்த்தம்.!
இந்த மாதிரி கேவலம் இதுதான் முதல் தடவை இல்லை. 2015 -ல் ஒரு கோ மாதாவுக்கு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள் அறிவாளிகள்.! அந்த கோ மாதாவின் அப்பா சிவப்பு எருது!
கேவலமாக இல்லையா என்றெல்லாம் கேட்கக்கூடாது.
“என்னைப்பார் யோகம் வரும்” என்று கழுதையின் படத்தை கடையில் மட்டி வைப்பவர்கள் நாம்தானே ராஜா!