வரலாற்றுச்சிறப்பு மிகுந்த இரண்டு படங்களை தமிழ்த்திரை உலகத்துக்கு தவம் இருந்து பெற்றுத் தந்தவர்தான் அந்த தயாரிப்பாளர்.
அந்த இரு ஞானக் குழந்தைகளும் குத்துன குத்தில் கல்லாப்பெட்டி ரொம்பின என்பது ஞாலமறிந்த உண்மை,
“இப்படிப்படம் எடுத்ததுக்கு தூக்குப் போட்டுச் சாகலாம்” என சிலர் கயிறு கொடுக்க முன் வந்தார்கள்.
“ஆமாய்யா…கயிறு கொடுப்பீங்க,விஷம் கொடுப்பிங்க. ஆனா கடன் தொல்லையில் மாட்டிக்கிட்டு நான் தற்கொலையைத் தேடி ஓடினப்ப என்னய்யா உதவி பண்ணுனிங்க.இன்னமும் நான் கடன்காரன்தான். வட்டி கட்டியே வயித்து வலி வந்திருச்சு.என்னய்யா உதவி பண்ணிருக்கிங்க?” என கொதிக்கிறார்.
அவரது கும்பி கொதிப்பதிலும் நியாயம் இருக்கா இல்லையா?