கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளை இயக்கிய ராஜ்குமார் முதல் முறையாக “செயலி” திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராகி இருக்கிறார்.,ஓசன்னா ஏ.ஜெ.ஆர். சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் ,பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வரும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.இதில்,தம்பி ராமையா, வி.டிவி. கணேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மொட்ட ராஜேந்தர், ஸ்ரீமன், பிரேம், இனியா, தேவதர்ஷினி இவர்களுடன் 5 பள்ளிக் குழந்தைகளும் நடிக்கின்றனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை, ‘மோடி’யு.கே. செந்தில் குமார் கவனிக்க,எல்.வி. முத்து கணேஷ் இசையமைக்கிறார்.

அஞ்சாதே,கோ, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆகிய ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டிய அஜ்மல் ,தமிழ் . தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வருகிறார்.தற்போது அஜ்மல் கதாநாயகனாக நடித்திருக்கும். படம் ”வியூகம்” இதில்,கதாநாயகியாக ஐஸ்வர்யாராஜ் அறிமுகமாகிறார். எஸ்.எம்.எஸ். அனுயா, சேரன் ராஜ், ஆர்த்தி, சரண்யா, தீபக், அரண் மோகன், விஷ்ணு கௌதம். மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை எஸ்.வி. என்டர்டெய்னர்ஸ் சார்பில் தண்டபாணி தயாரித்துள்ளார். ஹாரர் கிரைம், சஸ்பென்ஸ் கலந்த விறுவிறுப்பான வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை சந்தோஷ் மேனன். இயக்கியுள்ளார். தீபக் நிலம்பூர் இசையமைத்துள்ளார். ஷ்யாம் , ஜே.டி. பிரின்ஸ் பாடல்களை எழுதியுள்ளனர். ராபர்ட் , சதீஷ் நடனம் அமைத்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிக் கட்டப்பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில்’வியூகம் ‘ வெளியாகவிருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்’. மல்டி ஸ்டாரர் படமாக உருவாகிவரும் இப்படத்தில்,அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய்,அதிதி ராவ் , டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் , மன்சூர் அலிகான்உள்பட பலரும் நடித்து வருகிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துபாயில் நடத்தி முடிக்கப்பட்டது. சிம்பு மற்றும்காவிரி ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .இப்புகைப்படம் இணையதள ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்,பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.இத்தகவலை கீர்த்தி சுரேஷும் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஏற்கனவே சிவாவும், கீர்த்தியும் ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களில் ஒன்று சேர்ந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார்.