பலி பீடத்தை கொண்டுவந்து மைதானத்தில் வைத்தபோதே தடுத்திருந்தால் சாவுகள் தடுக்கப்பட்டிருக்கும்.அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கு ஒப்பாரி வைத்து விட்டுப் போய்விட்டன. தற்போது நீட் தேர்வில் இரண்டாயிரம் இடங்களை இழந்து விட்டு உயிர்ப்பலியும் கொடுத்து வருகிறது தமிழ்நாடு.
ரஜினிக்கு காலா பசி .கமலுக்கு விஸ்வரூபம் பசி. தங்களைக் காத்துக் கொள்வதே அவர்களுக்கு பெரும்பாடாக இருக்கிற நிலையில் நடிகர் விஷால் மட்டும் அறிக்கை விட்டிருக்கிறார்
“நீட் தேர்வுக்கு எங்கள் கிராமப்புற மாணவ, மாணவிகளை ஒவ்வொருவராக இழந்துவருகிறோம். போராடி உயிரை மாய்த்துக்கொண்டாள் அனிதா. தேர்வு எழுதியும் தோற்றதால் உயிரை தந்து இருக்கிறாள் பிரதீபா. இந்த செய்தி கேள்விப்பட்டதில் இருந்தே வேதனையாக இருக்கிறது. நீட் எழுதும் மாணவர்களுக்கு எப்போதும் கைக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன், நீட் நிரந்தரம் என்றால் நீட் எழுத மாணவர்களுக்கு போதுமான வசதிகளையும், சிறப்பு வகுப்புகளையும், மன தைரியத்தையும் கல்வி துறை வழங்கிட வேண்டும். இது அரசின் கடமை. இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஒரு ஏழை மாணவர் கூட டாக்டர் படிப்பை நினைத்து பார்க்க முடியாது என்ற நிலை உருவாகி விடும்.” என்று சொல்லி இருக்கிறார்.
அரசுகளின் காதில் விழப்போவதுமில்லை. மாணவர்களுக்கு விடிவும் கிடைக்கப்போவதில்லை.