விலாங்கு மீன் மாதிரியான வழு வழு உடம்பு. மாடலிங்கில் பழுத்த பழம். கிறுக்கு பிடிக்க வைத்து விடும் எடுப்பான இளமை.. இந்த சிம்புக்குனே எப்படியா மாட்டுது என புகை விடுகிறார்கள் செக்கச்சிவந்த வானம் பட யூனிட் புள்ளிகள்.
மணிரத்னத்தின் கண்டு பிடிப்புதான் டயானா எரப்பா. குடகு வார்த்தெடுத்த குமரி என்கிறார்கள். மாடலிங் பண்ணிக்கொண்டு இருந்தவரை இழுத்து வந்து விட்டார்.
“மாடலிங் பண்ணாம இருந்திருந்தால் ஐ.பி.எஸ்.ஆகி இருப்பேன் அதுதான் என் ஆசை” என்கிற டயானா படத்தில் சிம்புவுடன் நெருக்கம்.
“எப்படிம்மா இருந்தது ஷூட்டிங்?”
“ஆரம்பத்தில நடுக்கமாதான் இருந்துச்சு,வயித்துக்குள் கடபுடா. பயம். பெரிய டைரக்டர்.பெரிய நடிகர்கள். வசனமே பேச வரல.( வெறும் காத்துதான் வந்துச்சா?) மறந்து போச்சு. நாலஞ்சு சீன் போன பிறகுதான் நார்மலுக்கு வந்தேன். கேரக்டரும் சுதந்திரப்பறவை மாதிரிதான்! நீ எப்படி இருப்பியோ அப்படியே இருந்தால் போதும்னுட்டார் . சிம்புதான் பெஸ்ட் தோஸ்த்,செட்டில் என்னோடு கலகலப்பா இருந்தார்” என்கிறார் டயானா,