“என்னென்னவோ பார்க்கிற கண்ணுக்கு ரெஜினாவின் அந்த அசத்தல் திறமையைப் பார்க்க கொடுத்து வைக்கலியே! பாவம் செய்த கண்கள்னு புலம்பப்போறோம்னு ” இப்பவே கிக் ஏத்துகிறார் ரெஜினா. “ஏம்மா மிஸ்டர் சந்திரமவுலியில் ஆட்டம் போட்டத பார்த்த போதையே இன்னும்எறங்களே! இதைவிடவா பெரிசா இருக்கப்போவுது?” என்றால்,
“வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி ‘,செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை ‘ இது ரெண்டும் வரட்டும் அப்புறம் சொல்விங்க இந்த ரெஜினாவின் திறமையைப் பத்தி! இதுவரை இப்படி பார்த்ததில்லன்னு சொல்லக்கூடிய கேரக்டர் ‘பார்ட்டியில்’.தமிழ் ஆடியன்சுக்கு ஆச்சரியம் வரும் !மிரளப் போறாங்க.எனக்கும் ஜெய்க்கும் காம்பினேஷன் நிறைய இருக்கு.நிஜமான ‘பார்ட்டி’ பீல் வரும்.
இதுவரை பண்ணாத வேலையெல்லாம் செல்வராகவனின் படத்தில் இருக்கு! அந்தப் படத்தை எனக்காக தனியா போட்டுக் காட்டுங்கன்னு புரட்யூசரிடம் கேட்டிருக்கேன். லவ்லி சீன்ஸ் ” என்கிறார் ரெஜினா.