மிகப்பெரிய அளவில் ‘பேரன்பு’ இசை விழாவை நடத்தி விட்டார் இயக்குநர் ராம். கலைவாணர் அரங்கமே திணறி விட்டது.அவ்வளவு கூட்டம்.
பேரன்பு படம் பேச முடியாத ,சொன்னாலும் விளங்கிக்கொள்ள முடியாத ஆட்டிசம் பாதிக்கப்பட்ட 13 வயதுப் பெண்ணைப் பற்றிய கதை. தங்க மீன்கள் படத்தில் பாப்பாதான் அந்த பெண்.அப்பாவாக மம்மூட்டி.கேரளா சூப்பர் ஸ்டார்.
“நான் அதிகமாக பேச விரும்பவில்லை. படத்தைப் பார்த்து விட்டு மக்கள் அதிகமாகப் பேசுவார்கள் .பாராட்டுவார்கள்” என்று மம்மூட்டி சுருக்கமாக பேசிவிட்டார். யுவன்சங்கர் ராஜா,இயக்குநர் ராம் இருவரும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரை வெகுவாகப் புகழ்ந்தனர்.
“தமிழ் உள்ளவரை முத்துக்குமாரின் பெயர் இருக்கும் என்றார் ராம்.
“உங்களுக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை “என்று யுவனை நோக்கி ஒரு கேள்வி பாய்ந்தது.
“நான் விருதுகளுக்காக இசை அமைப்பதில்லை.ரசிகர்களுக்காக அமைக்கிறேன்.அவர்களின் பாராட்டை விட விருதுகள் உயர்வாகத் தெரியவில்லை” என்றார் யுவன்.