பெண்களைப் பற்றி சற்று கேலியாக யார் சொன்னாலும் பிரசன்னாவுக்கு கோபம் வந்து விடும்! உடனே பதிவு செய்து விடுவார்.
அண்மையில் இயக்குநர் ராமின் பேரன்பு பட விழா நடந்தது. கேரளத்து உச்ச நடிகர் மம்மூட்டி, இயக்குநர்கள் அமீர்,சமுத்திரக்கனி, மற்றும் சித்தார்த் ,யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மிஸ்கின் கலந்து கொள்கிற விழா என்றால் நிச்சயம் ஒரு வில்லங்கம் விழும் .அந்த விழுதைப் பிடித்துக் கொண்டு ஊடகங்கள் ஒரு வழி பண்ணி விடும். அன்றும் அதுதான் நடந்தது.
மம்மூட்டியை பாராட்டிய மிஸ்கின் “தான் மட்டும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் மம்மூட்டியை கற்பழித்திருப்பேன் “என்பதாகச் சொல்லி விட்டார்.
வழக்கம் போல மீடியாக்களில் சாத்துபடி !
போதாக்குறைக்கு மிஸ்கினின் நண்பர் பிரசன்னாவும்…!
“மிஷ்கின் என் நண்பர்தான்!ஆனால் அவர் பேசிய விஷயம் எனக்கு மிகவும் வெட்கமும் அசிங்கமாகவும் இருக்கிறது.பெண்கள் மற்றும் தமிழ் நடிகர்களைப் பற்றி அப்படி பேசி இருக்கக்கூடாது”
விடுங்கண்ணா.!