இரண்டு வருடங்களாகியும் திரைக்கு வராமல் முடங்கிக்கிடந்த மோகினிக்கு விரைவில் விடுதலைக் கிடைக்கவிருக்கிறது. முதன் முதலாக திரிஷா இரட்டை வேடம் போட்டிருக்கிறார், இயக்குநர் மாதேஷ் இந்தப்படத்துக்காக பட்ட கஷ்டங்களை சொன்னார்,
த்ரிஷா பேசியது :-
” நான் இப்படத்தில் மோகினி மற்றும் வைஷ்ணவி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் முதன் முதலில் நடித்துள்ள இரட்டை கதாபாத்திரம் இது தான். தினம் தினம் காலை எழுந்து செய்தித்தாளை படித்தால் அதில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றி தான் செய்தி அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும் போது மனதுக்கு வருத்தமாக உள்ளது. அந்த செய்தியை படித்த நாள் முழுவதும் நமக்கு அதை பற்றிய நினைப்பு தான் இருக்கும். மோகினி படத்திலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். இப்படத்தில் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் நிறைய விஷயங்கள் உள்ளது. படத்தை நாங்கள் லண்டன் , பாங்காக் போன்ற இடங்களில் படமாக்கியுள்ளோம் என்றார் த்ரிஷா.
பத்திரிகையாளர் ஒருவர் “பேய் இருப்பதாக நம்புகிறீர்களா ?” என்று கேட்டதற்கு நம்புவதாக சொன்னார்.