பெண்ணின் மனசு பெண்ணுக்குத்தான் தெரியும்னு சொல்வாங்க. அது உண்மைதாங்க. இத்தனை நாளும் ஸ்ரீ ரெட்டி தன்னை கெடுத்தவர்கள் என்பதாகச்சொல்லி ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீ காந்த், சுந்தர்,சி.உள்பட பலரின் பெயரை சொல்லி வந்தார். “பாவிகள் என்னை அனுபவித்துவிட்டு பச்சைத் தண்ணீ கூட வாங்கிக்கொடுக்கல பட்டினியா அனுப்பினானுக “என உருக்கமாக ஓலை வாசித்தார்.
“இந்தாம்மா,,உன்னிடம் ஆதாரம் இருந்தா போலீசுக்கு போ!.புகார் கொடு.இல்லேனா கேசப் போடு “என்று தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்திக் அறிவுரை சொன்னார். ஆனால் தற்போது அந்த காம்பவுண்டிலிருந்தே ஸ்ரீ ரெட்டிக்கு ஆதரவாக ஒரு குரல்.
குட்டி பத்மனி.
“பாலியல் தொல்லை சினிமாவில் இருப்பது உண்மைதான்!”என்று ஒப்புக்கொண்டதுடன் “அவர் சினிமாவை விட்டு விலகியதற்கு அதுதான் காரணம்” என்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
“ஒரு முறை தப்பு நடந்ததும் ஸ்ரீ ரெட்டி தன்னை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும்.வாய்ப்புக்காக அந்த தப்பை அவர் செய்திருக்கக்கூடாது.யாரும் அவரை கற்பழிக்கவில்லை.அவரின் சம்மதத்தில் எல்லாமே நடந்திருக்கிறது.ஏமாற்றியவர்களை உலகுக்கு தெரியப்படுத்துவதாக சொன்ன நோக்கம் நிறைவேறி இருக்கிறது. அவருக்கு என்னுடைய தயாரிப்பில் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன்” என்பதாக குட்டி பத்மனி சொல்லி இருக்கிறார்.