எல்லாம் குழப்பமாகவே இருந்தது. அது எப்படி நடந்திருக்கக்கூடும்? ‘சீக்ரெட் ஆபரேஷன்’ என நினைத்து இறங்கிய நடவடிக்கையை முன்னதாகவே வீரப்பன் எப்படி ஸ்மெல் பண்ணி அதிகாரிகளை வழி மறித்து தாக்க முடிந்திருக்கிறது?பரம ரகசியம் என்று நாம் நினைத்திருந்த ஆபரேஷன் மேட்டர் எப்படி கசிந்தது?
அந்த கருப்பு ஆடு யார்?
எஸ்.பி. பிபின் கோபால கிருஷ்ணன் மண்டைக்குள் ஒரு யுத்தமே நடத்தி விட்டார்.
எஸ்.ஐ. கிருஷ்ணா டெலிபோனில் சொன்ன செய்தியினால் அவர் ரொம்பவே உடைந்து போய் விட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னுடன் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்த வீரமிகுந்த சப் இன்ஸ்பெக்டர்களை அல்லவா வீரப்பன் சுட்டு சாய்த்திருக்கிறான்!
இதுவரை தோல்வி என்றால் என்னவென அறியாத தனக்கு இது கேவலமான முதல் தோல்வி! சரியான அடி!
போனில் எண்களை சுழற்றினார்.
எதிர்முனையில் வந்தவர் வி.வி.பாஸ்கர்.டி.ஜி.பி. ஹொகேனக்கல் அட்டாக்கைப் பற்றி விளக்கமாகப் பேசினார்.இருவரும் சம்பவ இடத்துக்கு செல்வதென முடிவாகியது. அடுத்து நடக்கவேண்டிய காரியங்களை எஸ்.பி. முடுக்கி விட்டார்.
சாம்ராஜ் நகர் இன்ஸ்பெக்டர் மச்சையா மற்றும் சிலரும் கோபிநத்தம் போய் சேர்ந்தனர்.
வீரப்பனால் தாக்கப்பட்டவர்களில் எஸ்,ஐ.சந்திரப்பா, பாரஸ்ட் ஆபிசர் சீனிவாச மூர்த்தி இருவரைத் தவிர மற்றவர் அனைவருக்கும் தருமபுரி அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. சந்திரப்பா,சீனிவாசமூர்த்தி இருவரையும் பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெண்டல் ஹெல்த் மருத்துவ மனையில் சேர்த்தனர்.,இறந்து போன அதிகாரிகளுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக மைசூர் முழுவதும் ஒருநாள் பந்த் நடந்தது.
அப்போதையை முதல்வர் விரேந்திரபட்டீல்.
அமைச்சரவைக் கூட்டம் அவசரக்கூட்டம்.
ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ் , எஸ்.டி.எப்.என்கிற புதிய படைக்கான கூட்டம் இந்த கூட்டத்தில்தான் அறிவிக்கப்பட்டது. கெ.யூ.ஷெட்டி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்..அதிரடிப்படையின் வேலைகளும் படு வேகமுடன் இருந்தன.
ஆனால் இவர்கள் போடுகிற திட்டம் எல்லாம் முன்னதாகவே வீரப்பனுக்கு தெரிந்து விடுவதுதான் வேடிக்கை.
இவனுக்கு மலை வாழ், ஆதிவாசிகள் இன்பார்மர்கள்.அவர்களின் கஷ்ட நஷ்டங்களுக்கு வீரப்பன்தான் கை கொடுத்தான் காசும் கொடுத்தான். குறைந்த சம்பளமே வாங்குகிற வன இலாகா ஊழியர்களும் வீரப்பனின் கஸ்டமர்கள்தான்! மாதம் தோறும் இவனும் சம்பளம் கொடுத்தான். இதனால் அதிரடிப்படையினரின் ரகசியத் திட்டங்களை முன்னதாகவே தெரிந்து தப்பித்துக்கொள்ள முடிகிறது வீரப்பனால்!
இதனால் ஆதிவாசிகளை கைக்குள் போட்டுக்கொள்ளும் திட்டம் தயார் ஆனது. இதுவும் வீரப்பனின் காதுக்கு வந்தது.
அவன் அதிரடிப்படையைப் பற்றி கவலைப்படவில்லை.
ஆனால் ஐ.ஜி.ஷெட்டி சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி சில ஆதிவாசிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டார்.
பலன் இல்லாமல் இல்லை!
தமிழ்நாட்டு எல்லையோரமாக இருந்த செந்தார மலைக்காட்டுக்குள் வைத்து ஆத்தூர் கோபாலனை கைது செய்தனர். பின்பக்கமாக கைகளுடன் கால்களையும் சேர்த்து வில் மாதிரி கட்டிப்போட்டு விட்டனர்.அடிக்கவோ,நகங்களை பிடுங்கவோ இல்லை. மாமரங்களில் உள்ள சிவப்பு நிற எறும்புகளை அவனின் முதுகில் விட ,ஆரம்பமாகியது நரக வேதனை!
கோபாலன் முதலில் வலியை தாங்கிக்கொண்டான்.தம் கட்டிப் பார்த்தான். வில்லாக வளைத்துக் கட்டிப்போட்டிருந்ததால் நடு முதுகில் வலி..எறும்புகள் கடித்ததால் எரிச்சல்.முகம் காது என்று எறும்புகள் எங்கெங்கோ சென்றன.கடித்தன.
நாளை …..கோபாலன் என்ன ஆனான்?