வீட்டுக்குத்தான் அடங்கல ,ஊருக்காவது அடங்கும்னு பார்த்தால் அது ஊரையே வித்துட்டு வந்து நிக்கிது என்பார்கள் .அந்த கதையாகிப் போச்சு வைகைப் புயலின் கதை.
ஆணானப்பட்ட ஷங்கரையே அசைத்துப் பார்க்கிறார்.வடிவேலுவை வைத்து புலிகேசியின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்று ஷங்கரும் சிம்புதேவனும் முடிவெடுத்தார்கள். தொடக்கமே சொதப்பல்.வடிவேலு பிரச்னை!
“வைகைப்புயலே ! படமே வேணாம் .வாங்கிய அட்வான்ஸ் வந்தால் போதும் ” என்று கேட்டும் புயல் அடங்கியபாடாக இல்லை. தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் செய்து விட்டார் ஷங்கர்.
தந்திரமாக காயை நகர்த்தி காரியம் சாதிக்க நினைத்த வடிவேலு லைகா முதலாளிக்கு போன் போட்டு “நானே உங்களுக்கு தனி கால்ஷீட் தாரேன். ஷங்கரோடு இருக்கிற லைனை கட் பண்ணுங்க “என்பதாக சொன்னாராம்.
“ஆகா, வாழை மட்டையை நம்பி மரக்கட்டையை விட்டா ஆத்தோடு போகவேண்டியதுதான் என்று “வேணாம் சாமி. ஆளை விடு” என்று லைனை கட் பண்ணி விட்டாராம் முதலாளி .
தயாரிப்பாளர் சங்கத்துக்கும் கட்டுப்படாத இந்த மதுரவீரசாமியை எதை வைத்து கட்டிப்போடுவார்களோ ,தெரியவில்லை!