கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. டார்ஜிலிங் மலைப் பகுதியில் முக்கிய காட்சிகளை படமாக்கினார்கள். பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்க சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்
அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள டேராடூன் சென்றார். அங்கு கடந்த 2 வாரங்களாக ரஜினிகாந்த் – சிம்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் கல்லூரி விடுதி வார்டன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்,பகலில் விடுதியில் பணியாற்றும் அவர் இரவில் தாதாவாக மாறி சமூக விரோதிகளுடன் மோதுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.டேராடூனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்..அவர் சென்னையில்சிகிச்சைபெற்று வரும் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்.தொடர்ந்து அடுத்த நாள்
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் பணிகள் குறித்தும் ரஜினி ஆலோசனை நடத்துகிறார். நிர்வாகிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய கட்சிப் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுரையிலும் சில காட்சிகளை படமாக்குகின்றனர். தற்போது 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த மாதம் முழு படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது