சீதையின் பத்தினித் தன்மையை உலகுக்கு உணர்த்த அவளை தீக்குளிக்கச்சொன்னான் ராமன் என ஒரு கதை உண்டு. அதைப்போல இருட்டு அறைக்குள் சிக்கிக்கிடந்த டைரக்டர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரை கை தூக்கிவிட்டு காப்பாற்றி இருக்கிறான் கஜினிகாந்த் .,ஆபாச சேற்றிலிருந்து வெளியே வந்தவர் தன்னால் இப்படியும் ஜெயிக்க முடியும் என காலரை தூக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்.
குளக்கரைக்கு போன கேனையன் கழுவ மறந்து வீட்டுக்கு வந்ததைப் போல இடுப்பு வேட்டி கட்ட மறந்த இன்னொரு ரஜினிகாந்த் தான் ஆர்யா…..கட்டுக்கட்டாக வல்லாரைக்கீரையை கடைஞ்சி மூளைக்குள் இறக்கினாலும் அப்பப்ப டைவர்சன் வந்து விடும்.ஆப்சென்ட் மைன்ட் புரபசரை நினைவு படுத்தினாலும் ஆர்யா வேற லெவல். எல்லாமே கை கொடுக்கிற சிச்சுவேஷன் காமடி.பின்னுதுல்ல தியேட்டர். சாயிஷாவைப் பார்த்த சந்தோஷத்தில் பிச்சைக்காரனுக்கு பைக் சாவியை போடுகிற இந்த மறதிமன்னாரு “கிளட்சை அமுக்கி கியரை மேலே தூக்குடா”ன்னு அவனுக்கு சொல்லிக்கொடுப்பது வெகு இயல்பு. பொண்ணு பார்க்க போன இடமெல்லாம் மகனின் ஞாபகமறதிக்கு கடி படும் அப்பாவாக ஆடுகளம் நரேன். காமடியில் சிதைச்சிட்டார்ல. அப்பனும் மகனும் அடிக்கும் லூட்டி தூக்குதய்யா கொட்டகையை!
சாயிஷாவை எந்த நேரத்திலய்யா சிருஷ்டித்தான் பிரம்மன்!? சாமுத்திரிகாலட்சணம் எங்கெங்கு வளைந்து உயர்ந்து நிற்குமோ அப்படி ஒரு உடல் அமைப்பு. படத்தை எங்கய்யா பார்க்க விட்டிங்க. ? கோளாறு சொல்ல முடியல சாமி!
சம்பத் சிறந்த நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால் இப்படி ஒரு மறதிக்காரனிடம் மாட்டிக்கொள்வது இதுதான் முதல் தடவை. நட்சத்திர தேர்வு சூப்பர். ஆர்யாவின் நண்பனாக சதீஷ்..ஆள் மாறாட்டம் பண்ணி முழி பிதுங்கும்போது மனிதருக்கு நடிப்பும் வருது சார்!
அந்த இன்ஸ்பெக்டர் திடீர் மாப்பிள்ளையாவதற்கு போடுகிற அப்ளிகேஷன் வேடிக்கையாக இருக்கிறது,
கஜினிகாந்த் செலக்சன் பெஸ்ட்.கலெக்சன் சூப்பர்.