யாரிடம் வேண்டுமானால் வார்த்தையாடலாம். ஆனால் இசைஞானியிடம் மட்டும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நெத்தியடியில் சித்தம் கலங்கிவிடும் நமக்கு! நாம் கேள்வி கேட்டால் அந்த பதிலே நமக்கு கேள்வியாகி விடும். தமிழ்ச் சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். நக்கலாகச்சொல்லி நாக் அவுட் பண்ணி விடுவார்கள். அத்தகைய கிண்டலாண்டிகளில் ஒருவர் மிர்ச்சி சிவா. தமிழ் (ப் ) பட ஹீரோ!
“நீங்கள் ஆன்மீகம் பற்றி பேசுறீங்க.இந்த உலகம் எப்படி இருக்கணும்னு நினைக்கிறிங்க?” என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
அதற்கு இசைஞானி ” உன் வேலை கேள்வி கேட்பது, என் வேலை பதில் சொல்வது. இதை நாம்ப ரெண்டு பேரும் அதாவது அவனவன் வேலையை ஒழுங்கா செய்தாலே போதும். உலகம் நல்லா இருக்கும்” என்று சொன்னாராம்.
“இதுக்குப் பிறகு கேள்வி கேட்டேன்னா நினைக்கிறீங்க ,ஒரே ஓட்டம்”என்றார் சிவா.