தமிழ்த் திரை உலகம் சார்பில் காமராஜர் மாளிகையில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. திரளாக வந்திருந்து மலர்கள் தூவியும் மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர் நிகழ்ச்சிக்கு மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி பேசுகையில் “காலையில் ராஜாஜி ஹாலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தேன் .ஆயிரம் பேர்தான் இருந்தார்கள். ( நல்ல வேளை. விடிகாலை 5 மணிக்கு போகவில்லை.) தமிழர்கள் மீது கோபம் வந்தது. தமிழகத்தின் மிகப்பெரிய தலைவருக்கு இவ்வளவுதானா மரியாதை என தமிழர்கள் மீது கோபம். மதியம் தூங்கிவிட்டு ( அவ்வளவு பெரிய தலைவர் இறந்து போயிருக்கிறார். உங்களால் எப்படி தூங்க முடிந்தது?) எழுந்து பார்த்தால் அலை அலையாக கூட்டம். டிவியில் பார்த்த பிறகுதான் தமிழர்கள், தமிழர்கள்தான்! என்பதை புரிந்து கொண்டேன்.
கலைஞர் கருணாநிதி தமிழகத்தில் 50 ஆண்டுகளாக ஒரு இயக்கத்தைக் கட்டிக்காத்தவர். அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும். ஏனென்றால் அதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர் கருணாநிதி.
எத்தனையோ துரோகங்கள், வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. கருணாநிதி இல்லாது அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர். தமிழகத்தில் இனி பெரிய விழா என்றால் ஸ்டாலின் யாரை அழைக்கப்போகிறார் என்று தெரியவில்லை.
கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. மெரினா பிரச்சினையில் அரசு மேல் முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். திமுக தலைவர் இறுதிச் சடங்கின் போது ஏன் தமிழக முதலமைச்சர் இல்லை? கருணாநிதிக்கு இறுதி மரியாதையின் போது முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா, தமிழக அமைச்சரவையும் கலந்து கொண்டிருக்க வேண்டாமா?”
” இவ்வாறு அவர் பேசினார்.
சூப்பர் சூப்பர்தான்!