அது ஒரு கனாக்காலம். வம்பர்கள் கம்பு சுத்தினாலும் சிம்பு-நயன் லவ் ஸ்மூத்தாக போன வசந்தகாலம் .மன்மத லீலையை வென்றாருண்டோ என காதல் ஜோடி ‘வல்லவன்’படக் காலத்தில் வாழ்ந்த காலம். அந்த நேரத்தில்தான் சிம்பு-நயன் நெருக்கமாக லிப்-லாக் பண்ணிய படங்கள் பத்திரிகைகள், தொலைக் காட்சிகள், சமூக வலைத் தளங்கள் என வலம் வந்தன.
இது எப்படி நடந்தது?
சிம்பு சொல்கிறார்;
“நாங்கள் துபாயில் புது கேமரா வாங்கினோம். அந்த கேமராவில்தான் ‘அந்தப்படம்’ எடுத்தோம்.அதை யாரோ லீக் செய்து விட்டார்கள்.அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.என்னால் ஒரு பெண்ணின் பெயர் கெடுகிறதே என்று! நான் அவர்களின் அனுமதி இல்லாமல் எந்தப்பெண்ணையும் தொடுவதில்லை.” என்கிறார்.