கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும்,கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் வீடு ,உடை ,உணவு என அடிப்படை தேவைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் , பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.இந்நிலையில் ,தமிழ்த்திரையுலகினர் தங்களால் முடிந்த அளவு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் , சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சம் ,கமல்ஹாசன்ரூ 25 லட்சம் .சிவ கார்த்திகேயன் ரூ.10 லட்சம் . நடிகைகள் நயன்தாரா , ஸ்ரீபிரியா, ரோகினி,நடிகர் சித்தார்த், ஆகியோர் தலா ரூ.10 லட்சம் , தனுஷ்- ரூ. 15 லட்சம், வழங்கியுள்ளனர். இந்நிலையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். கேரள வெள்ள பாதிப்புக்கு, இயக்குனர் ஷங்கர், ரூ 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிதி உதவி செய்துள்ளார்.அருள்நிதி ரூ .5 லட்சம் வழங்கியுள்ளார்.