கேரள மக்கள் கவலைப்பட்டார்களோ இல்லையோ சிலருக்கு பெருத்த கவலை. ‘
‘கேரளப்பேரிடர் வெள்ள நிதியாக இன்னும் தளபதி விஜய் கொடுக்கலியே எண்ணிட்டு இருக்கார் போலிருக்கு ‘என ஏகடியம் பண்ணினார்கள். நியாயமாக யாரைக் கேட்கணுமோ அந்த சூப்பர் நடிகரிடம் “என்ன சார், நீங்க வாங்குற சம்பளத்துக்கு இவ்வளவு குறைச்சு கொடுத்திருக்கிங்களே “என கேட்பதை விட்டு விட்டு விஜய்யை சீண்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களது வாயை அடைப்பதைப் போல 7௦ லட்சம் எனது உதவி என்று அறிவித்திருக்கிறார் தளபதி விஜய்.