எரவான் காட்சியகம். தாய்லாந்தின் பொக்கிஷம்.லே விர்யாபாந்த் என்கிற கலாரசிகரின் கற்பனையில் உருவானதுதான் இந்த காட்சியகம். பார்த்தவர்கள் அதிசயிக்கிறார்கள். எப்படி கட்டினார்கள், எத்தனை ஆயிரம் பேர் உழைத்திருப்பார்கள் ? உருகிப் போகிறார்கள். பேச்சிழந்து போகிறார்கள். 12 ஏக்கர் பரப்பளவில் எரவான் காட்சியகம் அமைந்திருக்கிறது. 3 தலை யானை. இந்த பித்தளை யானையின் எடை 25௦ டன். 29 மீட்டர் உயரம்.39 மீட்டர் நீளம். 15 மீட்டர் பீடத்தின் மீது நிற்கிறது. இந்த யானைக்குள் அற்புதங்களை பார்க்கலாம் தொன்மையான பொருட்களைப் பார்க்கலாம்.
அதாவது இந்துக்களின் பாதாளம் பூலோகம் சொர்க்கம் என்கிற அடிப்படையில் இந்த யானைக்குள் அதிசய உலகம் இருக்கிறது. பாதாளம் பூலோகம் இரண்டும் பீடத்திற்குள் பரந்து விரிந்து இரண்டு தளமாக இருக்கிறது .யானையின் வயிற்றுப் பாகத்தில்தான் சொர்க்கம். அரிய பொருட்களை வைத்திருக்கிறார்கள் படி எறிச் சென்றுப் பார்க்கலாம்