“பன்னெண்டு வருச வனவாசத்துக்குப் பிறகுதான் ராமனுக்கே பட்டாபிசேகம் நடந்திருக்கிறபோது நாமென்ன சாதாரண மனுசப் பிறவி சார்!”
தத்துவம் பேசுகிறார் தமன்னா..
“நான் சினிமாவுக்கு வந்து பன்னெண்டு வருஷம்.சினிமா உலகத்தைப் பத்தி ஒண்ணுமே தெரியாத வெத்து மனுசி. ஆனா இப்போ எல்லாமே தெரியும். நம்ம நிஜ வாழ்க்கைக்கும் சினிமாவுக்கும் என்ன தொடர்பு, அது எந்த அளவோடு நிக்கனும்கிறதெல்லாம் தெரிஞ்சிருக்கேன்.” என்கிறவர் மற்றொரு தத்துவமும் சொன்னார்.
“நாம்ப எதிர்பார்க்கிறது நடக்காது. ஆனா இது எங்கே நடக்கப் போகுதுன்னு அலட்சியமா இருக்கிறோமோ அது நடந்துடும். அது மாதிரி தான் படத்தின் வெற்றியும்! ஒரே படம் ஜிவ்வுன்னு உயரத்துக்குக் . கொண்டு போயிடும்.இப்ப நான் உயரத்தில்தான் இருக்கேன்.”என்கிறார் தமன்னா.