எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று உரிமை கோரி இருந்தார் ஆரூர் தமிழ்நாடன். இதனால் தனக்கு ஒரு கோடி ரூபாயை டைரக்டர் ஷங்கர் தரவேண்டும் என்பதாகக் கோரி இருந்தார், இந்த வழக்கின் சாட்சிய விசாரணைக்கு ஷங்கர் வரவில்லை. நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. வேலைகள் காரணமாக வர இயலவில்லை கால அவகாசம் வேண்டும் என்பதாக ஷங்கர் தரப்பில் கூறப்பட்டது, ஆனால் நீதிபதி எம்.சுந்தர் ஏற்க மறுத்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார், அந்த தொகை புளு கிராசிடம் செலுத்தும்படி உத்திரவிட்டு வழக்கை 12.ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்திரவிட்டிருக்கிறார்.