கலைஞர் கருணாநிதியால் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் மு.க.அழகிரி. கலைஞர் உயிருடன் இருந்தது வரை அவரை கழகத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை.
தலைவரின் மறைவுக்குப் பிறகு புதிய தலைவராக ஒரு மனதாக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.
திமுகவில் மீண்டும் இணையவேண்டும் என்பது அழகிரியின் ஆசை. ஜாடையாக சொல்லிப் பார்த்தும், அமைதிப் பேரணி நடத்திக் காட்டியும் திமுக மேலிடம் கண்டு கொள்வதாக இல்லை.
இதனால் வழக்கம் போல “இடைத் தேர்தல்களில் திமுக தோல்வி அடையும் “என பேசி வருகிறார். ஜாடை காட்டியும் பலன் இல்லை. பலம் காட்டியும் படிவதாக இல்லை. ஆகவே……
அழகிரியின் மனைவி காந்தி தனது கணவருக்கு ஐடியா கொடுத்திருக்கிறாராம்.
” மாமாவின் திருவாரூர் தொகுதியில் சுயேச்சையாக போடுங்க. அந்த ஊர் மக்கள் உங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க. அறிமுகமே இல்லாத தினகரன் ஆர்.கே.நகரில் ஜெயித்திருக்கிறபோது சொந்தமான தொகுதியில் ஜெயிக்க முடியாதா என்ன?” என சொல்லி இருக்கிறாராம்.