தற்போதைய பிஜேபி மந்திரிகளாக இருந்தாலும் சரி, அந்த கட்சியுடன் கூட்டுச்சேர்ந்த கட்சியினராக இருந்தாலும் சரி விஞ்ஞானிகளை மல்லாக்கப் போட்டு மாங்கு மாங்குன்னு குத்து விடுவதில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள்.
உத்திரபிரதேச துணை முதல்வராக இருப்பவர் தினேஷ் சர்மா. ஆராய்ச்சி செய்வதில் அசகாய சூரர். “இராமாயண காலத்திலேயே சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவது இருந்திருக்கிறது. ராமபிரானின் மனைவி சீதை டெஸ்ட் டியூப் குழந்தைதான்! “என்று கண்டு பிடித்திருக்கிறார். மண் பானைக்குள் சீதை பிறந்ததாக இராமயாணத்தில் சொல்லப் பட்டிருக்கிறதாம் வட இந்தியாவில்! அதை ஆதாரமாக வைத்து இப்படி சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்.