திருமணம் வரை போகாமல் நிச்சயதார்த்தம் முடிந்த சில மாதங்களிலேயே முறிந்த கதைகள் இருக்கின்றன என்றாலும் திரை உலகை பொறுத்த வரை திரிஷா, ராஷ்மிகா ஆகிய இரு நடிகைகளின் திருமணம் பந்தல் பார்க்காமலேயே அறுந்து போனதுதான் பரிதாபம்.
கன்னட நடிகையான ராஷ்மிகாவுக்கும் ,ரக்ஷித் ஷெட்டிக்கும் கடந்த வருடம் ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திடீர் என நிச்சயதார்த்தம் முறிந்து போனதாக அறிவித்து விட்டார் கீத கோவிந்தம் நடிகை.
தெலுங்கில் சூப்பர் ஹிட் படம்தான் கீத கோவிந்தம். மாப்பிள்ளையும் பொண்ணுமாக இணைய விருந்தவர்கள் இணைந்து நடித்த படமும் கன்னடத்தில் நல்ல வெற்றி பெற்றவைதான்!
பிறகேன் இந்த முடிவு?
பெற்றோர், குடும்பத்து பெரிசுகள், உறவுகள், மற்றும் நண்பிகள் அனைவரிடமும் கலந்து ஆலோசித்துத்தான் ராஷ்மிகா இந்த முடிவை எடுத்தாராம். கன்னடம்,தெலுங்கு இந்த இரண்டு மொழிப் படங்களிலும் கை வரிசை காட்டிய பிறகுதான் கல்யாணத்தை முடிவு செய்வாராம்.