திரை உலக நடிகர் -நடிகையின் காதல் என்றால் பத்திரிகையாளர்களுக்கு தனித்த ரசனை. செய்திகள் திரட்டுவதில் வேகம் இருக்கும். அண்மையில் கன்னட நடிகர், நடிகையின் பிரேக் அப் செய்தி வைரல் ஆகி இருக்கிறது.
ராஷ்மிகா- ரட்சித் ஷெட்டி இருவரது திருமண ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது என்பதை நடிகை ராஷ்மிகாவே தெளிவாக சொல்லி இருக்கிறார்.
ஆனாலும் அவர்கள் காதலர்கள். காதலின் பெருமை உணர்ந்துதான் ஒப்பந்தம் வரை வந்தார்கள். ஆனாலும் ஏனோ மணமேடை ஏறவில்லை. திரைத்துறையை சேர்ந்தவர்களின் காதல்தான் பலிபீடம் போகும் வரை விமர்சிக்கப்படும். இது நாகரீகம் இல்லை என்றாலும் வணிக ரீதியாக காரணம் சொல்லும் வசதி இங்கு உண்டு.
தன்னை கழற்றிவிட்ட காதலி ராஷ்மிகாவை இன்னமும் காதலுடன்தான் பார்க்கிறார் ரட்சித் ஷெட்டி.
ஊடகங்களைப் பார்த்துக் கேட்கிறார்.
“ராஷ்மிகாவை ஜட்ஜ் பண்ண நீங்கள் யார்? அவர் இன்னமும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறார்.! அவரை ஏன் வில்லியாக பார்க்கிறீர்கள்? நீங்களாகவே அந்த பெண்ணை பற்றிய முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்.அதற்காக உங்களை குற்றம் சாட்டவில்லை.
‘இத்தகைய’ சூழ்நிலை எப்படி உருவாக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியும்.நாம் கேள்விப்படுவதும், பார்ப்பதும் பல நேரங்களில் உண்மை ஆகி விடுவதில்லை.இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராஷ்மிகாவுடன் பழகி வந்திருக்கிறேன். உங்களை விட எனக்கு அதிகமாகவே தெரியும்.! பல உண்மைகள் இங்கே.! அதனால் ராஷ்மிகாவை ஜட்ஜ் பண்ண வேண்டாம். அவரை அமைதியாக இருக்கவிடுங்கள். உண்மையான முடிவு விரைவில் தெரியும்” என்கிறார் ரட்சித் ஷெட்டி.