இத்தனை நாளும் எலிப் பொந்துக்குள் பதுங்கி இருந்த நாகம் பசி அடங்கியதும் தலையை நீட்டுவதைப் போல எச். ராஜா என்பவர் தலையை நீட்டியிருக்கிறார்.
அரச சபையில் அரசருக்கு சிரிப்பூட்டுவதற்கு என தனி விதூஷகன் இருப்பானாமே, அது போல பாஜகவுக்கு ராஜா ! பாஜகவின் அரசியலில் தளர்ச்சி ஏற்படும் போதெல்லாம் அவரை எறக்கி விட்டுவிடுவார்கள்போல!
அண்மையில் நாட்டு நடப்பைப் பற்றி தாறுமாறாக சொல்லி வைக்க பிரச்னை ஆகி இருக்கிறது. கடுமையாக சீறாத நடிகர் சித்தார்த்கூட ராஜாவை “கண்ணியமில்லாதவர்,ஆபத்தான புளுகர்”என வார்த்தைகளால் அழகு படுத்தியிருக்கிறார்.
கஸ்தூரி மாநில பிஜேபி தலைமைக்கு கேள்வி கேட்டிருக்கிறார்.
“கெட்டவார்த்தை பேசறார்.லஞ்சம் தரேன்னு சொல்லுறார்.எச்.ராஜா மீது நடவடிக்கை உண்டா? தமிழிசைக்கு கேள்வி.
ராசா மீதெல்லாம் கை வைக்கும் உரிமை அந்தம்மாவுக்கு கிடையாது.