சிம்பிள் டிரஸ்தான் ஆனாலும் கண்ணைக் குத்தும் கவர்ச்சி. தளதள தக்காளி மாதிரி இருந்த அமலாபாலா இவர்?ராட்சசன் பட இசை வெளியீட்டு விழா முடிந்து வெளியில் வந்த அமலாபாலை சுற்றி வளைத்து செல்பி எடுத்தது வெளியாட்களா, மீடியா ஆட்களா என்பது தெரியவில்லை. மொய்த்து விட்டனர். எப்படியோ ஒரு வழியாக காரில் ஏறி விட்டார்.
படத்தின் டைரக்டர் ராம்குமார் இவ்வளவுஅம்மாஞ்சியாக இருப்பார் என சாமி சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அமலாபால் இவரைப் பற்றி சொன்னது சரிதான்! எழுத்துக் கூட்டி பேசுவதை விட சற்று வேகம். ஆனால் என்ன பேசுவது என்பது தெரியாமல் மேடைக்கு வந்து விட்ட மாதிரி இருந்தது.
“20 தயாரிப்பாளர்களிடம் ,17 ஹீரோக்களிடம் கதை சொல்லி இருப்பேன் ராட்சசன் கதைய.!கடைசியில் டில்லிபாபு தான் பண்ணலாம்னு வந்தார். முண்டாசுபட்டி காமடி கதை சொன்னவர் இவ்வளவு சீரியசாக கதை சொல்வாரா அப்படியே எடுப்பாரா என்கிற சந்தேகம் வந்திருக்கலாம்” என்றார் இயக்குநர்.
அமலாபால் பேசும்போது…..
“டைரக்டர் கதை சொன்னது புரியல.அவருக்கு ரொம்பவும் கூச்ச சுபாவம். இப்படி கூச்ச சுபாவம் உள்ளவர் படத்தில் நடிக்கிறது சரியாக இருக்குமான்னு கூட நினைச்சேன்.எனக்கு கம்மியான சீன்ங்கிற குறை இருந்தது.ஆனா சீன் ரொம்பவும் டெப்த்.வித்தியாசமான அனுபவம். எனக்கு இண்டஸ்ட்ரியில் நண்பர்கள் கிடையாது.இந்த படத்தின் மூலம் விஷ்ணு நல்ல நண்பராகிவிட்டார்.”என்றார்.