பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ‘காமராஜ்’ படத்தில் நடித்துள்ள சமுத்திரகனி இன்று காமராஜர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு, `காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ரமணா கம்யூனிகேஷன்ஸ் தயாரித்த இந்த படம், 2004 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விருதை பெற்றது. இப்போது அந்த படம், நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. இப்படம் குறித்து இயக்குனரும்,நடிகருமான சமுத்திரகனி பேசும் போது…. நேர்மையாக வாழ்ந்த ஒரு மனிதனின் வாழ்கையை பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியவில்லை இந்த படத்தை ஓவொரு பள்ளி குழந்தைகளும் பார்த்து எதிர்காலத்தில் காராஜர் போல் யாராவது வர மாட்டார்களா என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. இந்த படத்தில் நான் நடித்த போது காமராஜரை பற்றி கேள்வி பட்ட பல விஷயங்கள் எனக்கு கண்ணீரை வரவழைத்தது இந்த படம் எனக்கு மறக்க முடியாத ஒரு படம் என்றார்