மெட்ராஸ், கொம்பன் ஆகிய படங்களை த் தொடர்ந்து, கார்த்தி நடித்து வரும் காஷ்மோரா மற்றும் நாகார்ஜுனனுடன் நடிக்கும் படம் ஆகியவற்றின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்நிலையில் கார்த்தி, மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ‘ஓகே கண்மணி’ படத்தை இயக்கிய மணிரத்னம், விரைவில் மீண்டும் ரொமான்ஸ் காதல் கதைஒன்றை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க மணிரத்னம், கார்த்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. , விரைவில் இந்த படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிகிறது. நடிக்க வரும் முன்பே ,மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் கார்த்தி, மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஸ்கிரிப்ட் தயாராகிவிட்டதாகவும், செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.