சண்டக்கோழி.2 படத்தில் எத்தனையோ சுவையான சம்பவங்கள். அதில் ஒன்றிரண்டு காதுகளுக்கு வந்தன.
இந்த படத்தின் முக்கியமான கேரக்டர்களில் வில்லத்தனம் மிகுந்த ஒன்றும் இருக்கிறது. பொதுவாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அந்த கேரக்டருக்கு யாரைப் போடலாம் என ஆலோசனை கலந்திருக்கிறார்கள்.
“எங்கப்பா சரத்குமாரைப் போடலாமே” என சொல்லியிருக்கிறார் மகள் வரலட்சுமி.
“ஆகா சண்டைக் காட்சிகள் ரொம்ப இயற்கையாக இருக்கும்மா…அடி பலமாத்தான் விழும்! எத்தனை லைட்டுகள் உடையுமோ தெரியாது. நல்ல ஐடியா கொடுத்தே..அந்த கேரக்டர்ல ஒரு பொண்ணு பண்ணினால்தான் நல்லா இருக்கும்”என்று விஷால் சொல்லியிருக்கிறார். கடைசியாக கதை விவாதம் முடிவுக்கு வந்த பின்னர் அந்த வில்லியாக வருவே நடிக்கட்டும் என ஒரு மனதாக முடிவு செய்திருக்கிறார்கள்.