அரவக்குறிச்சி பிரசாரத்தில் கமல்ஹாசன் மக்கள்நீதிமையக்கட்சியினவேட்பாளரை ஆதரித்து பேசியபோது,இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியது பெரும் சர்ச்சையானது. அதிமுகவினரும், பாஜகவினரும் கொதித்து எழுந்தனர்.அவர்மீது பாஜக உள்பட எதிர்கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என்ற ஒரு தகவலும் பரவிவருகிறது.
கமலின்கருத்துக்குபிரதமர்மோடியும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு அவர் இன்று மதியம் திருப்பரங்குன்றம் வேட்பாளரான சக்திவேலுக்கு ஆதரவாக மீண்டும் தோப்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்அப்போதுஅவர்பேசியதாவது,
“அரவக்குறிச்சியில் நான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கோபப்படுகின்றனர். ஆனால், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று நான் கூறியது சரித்திரத்தில் இருக்கும் உண்மை.
கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. யாரும் எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை ; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும். உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும். மதச் செருக்கு , சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது ; நான் சொன்னது சரித்திர உண்மை. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம்.
ஒருமுறை பேசிய என் மீது வழக்கு என்றால் பலதடவை என் பேச்சை ஒளிப்பரப்பிய ஊடகங்கள் மீதும் வழக்கு போட வேண்டியது தானே ? என் மீது குற்றம் சொல்லும்போது அதை நம்புவது போல சொல்லுங்கள்.தொண்டர்களின் அடிபொடி நான். மக்களிடம் உண்மையே வெல்லும்.
நான் இன்று தீவிர அரசியலில் இறங்கியிருக்கிறேன். அதனால் என் பேச்சு தீவிரமாகத்தான் இருக்கும். அதில் வன்முறை இருக்காது. வார்த்தை ஜாலங்கள் இருக்காது. நான் தீவிரவாதி என்றுதான் சொன்னேனே தவிர பயங்கரவாதி, கொலைகாரன் என்றெல்லாம் சொல்லவில்லை.
பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த முறையாவது பத்திரிகையாளர்கள் என் பேச்சை முழுமையாக கொண்டு சேரும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. உண்மை கசக்கும்; ஆனால், கசப்பே வியாதியைக் குணமாக்கும் மருந்து’’ இவ்வாறு அவர்பேசினார்.
வீடியோ இணைப்பு ;