நடிகர்சங்க பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் நடிகர் சரத்குமார் மீது கடும் குற்றசாட்டுகளை கூறியிருந்தார் .இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நடிகை வரலட்சுமி அறிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

சரத்குமார் தலைவராக இருந்த போது எதையும் செய்யவில்லை என்றும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் என்றும் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி வேடிக்கையாக இருக்கிறது.

உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும் போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா..?
படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்து விட்டு கோர்ட் வாசலில் நிற்கிறீர்களே..? நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டோ..?
இன்றைய தலைவர் நாசர் எதைக்கேட்டாலும் அப்படியா!, இது எனக்கு தெரியாமல் நடந்து விட்டது என்று வழக்கம் போல் ஓடி ஒளிந்து கொள்வார்.
இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது.
இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்.இவ்வாறு நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.