தெருவில் நாய்கள் சல்லாபிக்கும் போது சிலர் கல்லெறிந்து காயப்படுத்துவது உண்டு.
சிலர் ஓரக்கண்ணால் பார்த்து ரசிப்பார்கள். மற்றும் சிலர் எங்கேயோ பார்ப்பது போல கள்ளத்தனமாக ரசித்து மகிழ்வார்கள்.
பொதுவாக பெரியவர்கள் சொல்வார்கள் “அப்படி கல் எறிவது பாவம்.நாளை உங்களின் இல்லற வாழ்விலும் வேறு வகையான இடைஞ்சல்கள் வரலாம்” என அறிவுறுத்துவார்கள்.
இங்கே சொல்லப்போவது வேறு வகையான கதை.
கோரக்பூரை சேர்ந்த ரியான் கிராமம்.
ஜெய்சிங் யாதவ் என்பவர் தாய்லாந்தில் வேலை பார்க்கிறார்.
மனைவி கிராமத்தில்!
சம்பவத்தன்று யாதவ் மனைவிக்கு போன் பண்ணிப் பேச ,கடல் கடந்து போன கணவனுடன் மெய் மறந்து பேசியபடியே படுக்கை அறைக்கு சென்று இருக்கிறாள்.
“சுவையான செய்திகள் சொல்லுங்க அத்தான்?”
“சுவைக்காது கண்ணே நீ. அணைப்பில் இல்லாது போனால்?”
இப்படி பேசினார்களோ என்னவோ மெத்தை மீது இரண்டு பாம்புகள் சரசமாடியதை அவள் பார்க்கவில்லை.
இந்த சமயத்தில் யாரும் அருகில் வந்தால் அவைகளின் கோபம் பன்மடங்காகி விடும் என்பார்கள்.
கீதாவோ அந்த மெத்தை மீது இருந்த பாம்புகள் அருகே ஜம் மென உட்கார்ந்து பேச பாம்புகள் ‘பட்’டென போட்டு தள்ளி இருக்கின்றன.
சுருக்கென குத்திய உணர்வு. படபடப்பு .வெளியே வந்த அவள் அங்கேயே உயிர் இழந்து விட்டாள்.
உறவினர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். செத்த பிறகு எதற்கு சிகிச்சை?
திரும்பியவர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்தபோது அந்த பாம்புகள் இன்னமும் பரவச நிலையில்!
பாவிகள் இரண்டையும் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.