விளையாட்டாக ஆரம்பித்த பழக்கம் நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்திருக்கிறது.
இதில் என்ன வேடிக்கை என்றால் அந்த கெட்ட பழக்கத்தை செய்து வந்தவர் ஒரு வக்கீல் .
அது என்ன கெட்ட பழக்கம் ? கண்ணாடியை தின்பது.!
வடிவேலு முன்பாக ஒருவர் டியூப் லைட்டை கடித்து தின்பது போல ஒரு காட்சி வருமே ..அதே அதே கதைதான்.!
தயாராம் சாஹு . வக்கீல் .இவர்தான் பல்ப் தின்னும் பலே ஆள்.!
“ஏன் சார் இது தப்பு இல்லையா?”
“தப்புதான் ! சின்ன வயசில பல்ப் தின்ன ஆரம்பிச்சேன், வேடிக்கை பார்க்க கூட்டம் கூடுச்சி. அப்புறம் அதே பழக்கமாயிடிச்சி.நாப்பது வருசமாச்சு! சிகரெட்,பிராந்தி குடிக்கிற மாதிரி அடிக்ட் ஆகிட்டேன் .டாக்டர்கள் கடுமையா கண்டிச்சாங்க. சின்ன பீஸ் குடலில் மாட்டுச்சுன்னா அவ்வளவுதான்னு எச்சரிச்சாங்க. விட்டுட்டேன். எப்பவாவது ஆசை வரும் .அப்ப மட்டும் சின்ன பீசா ..!இதனால பல்லு பூரா கேட்டுப் போச்சு !” என்கிறார்.
அடப்பாவி!