‘பாபா’,’ உன்னை சரணடைந்தேன்’,’ வீராப்பு’, உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்த இவர், அதன் பிறகு ‘இளவரசி’ உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார்.
ஃபேஷன் டிசைனில் ஆர்வம் கொண்ட இவர் தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge’* கடையை சென்னையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக மேக்கப், ஹேர் ஸ்டைலிஸ்ட் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடத்தியுள்ளார் சந்தோஷி.
இந்நிகழ்ச்சியில் ஆசிட் வீச்சால் அழகை பறிகொடுத்த டெல்லி லக்ஷ்மி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நடிகை நமீதா பேசும்போது..,
‘ராஜஸ்தான் மாநிலத்தில் ‘பிப்லாந்திரி’ என்கிற ஒரு கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த இந்நிகழ்வால் இயற்கையை பாதுகாப்பது
மட்டுமில்லாமல் மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்..
பெண்கள் வாழப் பிறந்தவர்கள்.. வீராங்கனைகள்.. இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.. என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது.. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள்.. வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள்.. அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இன்று உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என உணர்ச்சி மிக பேசினார்.