தமிழ்நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகள் திமுகவும் அதிமுகவும்தான்.!
ஆட்சி பீடத்தில் இருப்பதால் அதிமுகவுக்கு அதிகாரபலம் கூடுதல் வலிமை. அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கழகமும் சம வாய்ப்புகளை பெற்றிருந்தன. இதற்கு பண பலமும் அதிகாரமும் அதிமுகவுக்கு இருந்ததால் வெற்றி பெற முடிந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
விரைவில் தேர்தல் வர இருப்பதால் எல்லா கட்சிகளுமே வேட்பாளர் தேர்வில் கவனம் செலுத்தி வருகின்றன.
திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “கழகம் கட்டளையிட்டால் தேர்தல் களம் புக தயாராக இருப்பதாகவும் ,தமிழகத்தில் எந்த தொகுதியில் நிற்க சொன்னாலும் நிற்பேன் “என்று சொன்னார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் நிற்கலாம் என்று அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.
கலைஞர் கருணாநிதியின் வரலாறை படமாக்கும் ஆசை இருப்பதாக சொன்னார். கலைஞர் வேடத்தில் தகுந்த நடிகரை நடிக்க வைத்து அந்த படத்தை தயாரிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் உதயநிதி சொன்னார்.
“தலைவர் கலைஞருக்கு திரைப்படங்களில் வருகிற நீதி மன்ற காட்சிகளை பார்ப்பதில் அதிக விருப்பம் இருந்தது..நான் நடித்த மனிதன் படத்தின் நீதி மன்ற காட்சியை அவருக்கு காட்டலாம் என்றிருந்தேன் .ஆனால் இயலாமல் போனது” என்கிற வருத்தத்தையும் தெரிவித்துக் கண்டார்.