நடிகை ஸ்ரத்தா ஶ்ரீநாத். தற்போது தமிழில் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்து வரும் சக்ரா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது அறிவிக்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வரும் ஸ்ரத்தாஸ்ரீநாத் ,அவர் பெண்ணியவாதியாக மாறியது ஏன் என்பது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளதாவது
,”அப்போது எனக்கு 14 வயது. குடும்ப பூஜை ஒன்று நடந்து கொண்டிருந்தது. திடீரென்று எனக்கு மாதவிடாய். அருகில் அம்மா இல்லை. என் அத்தைக்கு அருகில் சென்று அமர்ந்தேன். என்னிடம் சானிடரி பேட் இல்லை. விஷயத்தை கவலையோடு சொன்னேன். அருகில் இருந்த இன்னொரு பெண், என் கவலையைக் கண்டு சொன்னார், ‘மாத விடாய் நேரத்தில் பூஜையில் இருந்ததற்காக கவலைப்படாதே, குழந்தை. கடவுள் உன்னை மன்னிப்பார்’ என்று.அப்போது முதல் நான் பெண்ணியவாதியாக மாறினேன். நம்பிக்கை அற்றவளாகவும் ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.இப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.