நடிகர் ரஜினிகாந்த் வரும் நவம்பர் மாதம் கட்சி தொடங்க உள்ளார் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இதை உறுதி படுத்தும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முக நூலை பதிவில், “தலைவர் (ரஜினிகாந்த்) தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால், அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன்.சேவையே கடவுள்.நவம்பர்?”இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.“நண்பர்களே, ரசிகர்களே, வணக்கம்.இன்று ஒரு முக்கியமான விஷயம் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். கடந்த மாதம், அரசியலுக்கு வராமலும் நாம் சேவை செய்யலாம் என்று பதிவிட்டிருந்தேன். அதற்கான காரணம் இது தான்.
நான் பல சமூகப் பணிகளைச் செய்துவருவதால், , என் நண்பர்கள், ரசிகர்கள், ஊடக நண்பர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர், நான் அரசியலில் நுழைவதற்கு தான் இதையெல்லாம் செய்கிறேனா என்று கேட்கின்றனர். இன்னும் சிலர்,அரசியலுக்கு வந்தால் என்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று அறிவுறுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக கொரோனா நெருக்கடி சமயத்தில் செய்த பணிகளுக்குப் பிறகு இன்னும் அழுத்தம் அதிகரித்துள்ளது.
அனைவருக்கும், நான் ஒரு பொதுவான நபர் என்று சொல்ல விரும்புகிறேன் . என் வீட்டில், குழந்தைகள் காப்பகம் ஆரம்பித்து அதன் மூலம் என் சேவையைத் தொடங்கினேன். எப்போதெல்லாம் உதவி தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் அரசாங்கத்தை நாடியிருக்கிறேன், எல்லோருமே எனக்குச் சிறந்த ஆதரவைத் தந்திருக்கின்றனர். கலைஞர் அய்யா , ஸ்டாலின் சார், அன்புமனி ராமதாஸ் சார் போன்றவர்கள் பல இதய அறுவை சிகிச்சைகளுக்கு உதவியுள்ளனர். மேலும் ஜெயலலிதா அம்மா, எடப்பாடி. கே.பழனிசாமி ஐயா, ஓ.பன்னீர்செல்வம் சார், விஜய பாஸ்கர் சார் மற்றும் பலர் பல்வேறு சேவைகளை செய்ய எனக்கு ஆதரவளித்துள்ளனர். நான் அரசியலில் நுழைந்தால் ஒற்றை மனிதனாகச் செய்வதை விட அதிக சேவையைச் செய்ய முடியும் என்பதை நான் நன்கு அறிவேன்,
ஆனால், நான் அரசியலுக்குள் நுழையாத ஒரே காரணம், அரசியலுக்கு வந்தால் இன்னொருவரைப் பற்றித் தவறாகப் பேச வேண்டும். எனக்கு இந்த எதிர்மறை அரசியல் பிடிக்காது. ஏனென்றால் நான் அனைவரையும் மதிக்கிறேன்.இதுவே என் அம்மாவின் கருத்தும் ஆகும்,
யாராவது ஒரு கட்சி தொடங்கி, அதில் எதிர்மறை அரசியல் வேண்டாம், யாரைப் பற்றியும் தவறாகப் பேசி புண்படுத்த வேண்டாம் என்ற நிலை வந்தால் அப்போது நான் அவர்களுடன் சேர்ந்து, பொதுச் சேவையில் என் பங்கைச் செய்வேன். இந்தியாவில் அப்படி ஒரு நேர்மறை அணுகுமுறையுடைய கட்சியை ஆரம்பிக்க, எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே அடைய முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏனெனில் அவர் ஒரு அரசியல் காரணத்திற்காக இருந்தாலும் யாரையும் காயப்படுத்தவில்லை. எனவே, அவர் ஒரு கட்சியைத் தொடங்கினாலும் அவர் ஒருபோதும் யாரையும் காயப்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
எனவே, தலைவர் (ரஜினிகாந்த்) தனது ஆன்மீக அரசியலைத் தொடங்கிய பிறகு, அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால், அவருடன் சேர்ந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன்.சேவையே கடவுள்.நவம்பர்?இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.