கொரோனா லாக்டவுனால் மன நிம்மதி இழந்தவர்கள் ஏராளம். வேலை பறிபோனதாலும், சம்பளம் அதிரடியாகக் குறைக்கப்பட்டதாலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். சிலர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. தமிழில் பன்னீர் செல்வம் இயக்கத்தில் கடந்த 2009-ல் வெளியான ரேனிகுண்டா படத்தில்கதாநாயகியாக நடித்தவர் நடிகை சனுஷா.மலையாளப்படவுலகின் முன்னணி நாயகியான இவர் தொடர்ந்து,காசி, பீமா,நந்தி, எத்தன், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்பட சில படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை சனுஷா,கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், தான் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டதாகவும், அப்போது தனக்கும் தற்கொலைசெய்து கொள்ளும் எண்ணம்கூட வந்தது என்றும் கூறியுள்ளார். இது குறித்து சனுஷா கூறுகையில்,
“தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் கடினமான சூழ்நிலையை நான் எதிர்கொண்டேன். இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.நான் மன சோர்வு, பதட்டம், பீதியுடன் போராடிக் கொண்டிருந்தேன். யாருடனும் பேசவும் எனக்கு விருப்பம் வரவில்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் இருந்தது..அந்த சமயத்தில் தான் நான் எனது தம்பி சனூப் குறித்து யோசித்தேன். அவன் என் மேல் உயிரையே வைத்துள்ளான். ஒருவேளை நான் தற்கொலை செய்தால் நிச்சயமாக அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. எனவே தான் நான் தற்கொலை முடிவிலிருந்து பின் வாங்கினேன்.இதையடுத்து எனக்கு நெருங்கிய தோழி ஒருவரை தொடர்பு கொண்டேன். பின்னர் காரை எடுத்துக்கொண்டு ஒரு மாற்றத்துக்காக நாங்கள் வயநாடு சென்றோம்.எனக்கு ஏற்பட்ட பாதிப்பு , என் குடும்பத்தினரிடம் கூடசொல்ல பயந்து,. நானும் ரகசியமாக மனநல மருத்துவரை அணுகி மருந்துகளை எடுத்துக்கொண்டேன். அந்த கடினமான நேரத்தில் .என்னை மேம்படுத்த யோகாவையும் நடனத்தையும் தொடங்கினேன். கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பல இடங்களுக்குச் சென்றேன். இப்போது நன்றாக உணர்கிறேன். இந்த வாழ்க்கையை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்னை நினைத்தே பெருமைபடுகிறேன். என்கிறார் சனுஷா.