ரோகிணியை நடிகையாகத் தெரியும் .அவர் மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவி என்பதும் தெரியும். ஆனால் அவர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் யார் என்பது தெரியுமா?
நடைபெறக்கூடிய தேர்தலில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சிக்காக கடுமையாக பிரசாரம் செய்து வருகிறார்.
மிகவும் எளிமையான தோற்றம். பிஜேபி நமீதாவைப் போல அல்லது அதிமுக விந்தியாவைப் போல பந்தாவாக பவனி வருவதில்லை.
ஆணித்தரமாக அரசுகளுக்கு எதிரான குற்றங்களை சொல்கிறார். ஆபாசமில்லாமல் பேசுகிறார்..பிரசாரத்தில் கண்ணியம் இருக்கிறது.
“அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச சிலிண்டர் என்கின்றனர். இதை ஆட்சியில் இருக்கும்போதே வழங்கியிருக்க வேண்டியதுதானே ?என்பது நடிகை ரோகிணியின் சரியான வாதங்களில் ஒன்று.
திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து நகரின் பல பகுதிகளில் பகுதிகளில் ரோகிணி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மற்றும் கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர். பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம் வழியாக மணிக்கூண்டை ஊர்வலம் சென் றடைந்தது.
அங்கு ரோகிணி பேசியதாவது:
திண்டுக்கல் போன்ற நகரங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கும்போது எட்டுவழிச் சாலை அவசியமா?
பல சிறு, குறு விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்து எட்டுவழிச் சாலையை அமைக்க வேண்டிய அவசியம் என்னவென்றால் அது பெரும் முதலாளிகளுக்கானது என்பதால்தான்.
கல்விக் கொள்கையில் 3-ம் வகுப்பில் பொதுத் தேர்வு என்பதை எந்தத் தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார். எட்டு வயது குழந்தையை ஒரு பொதுத் தேர்வுக்கு தயார்படுத் துவது என்பது அம்மாக்களுக்கு எவ்வளவு பெரிய மனஅழுத் தத்தை ஏற்படுத்தும். என்பது அரசுக்கு தெரியாதா? ஆட்சியில் உள்ளவர்கள் யோசிக்க மாட்டார்களா?
கியாஸ் சிலிண்டரின் விலையை குறைப்பேன் என சொல்லாத அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச சிலிண்டர் என்கின்றனர். இதை ஆட்சியில் இருக்கும் போதே வழங்கி இருக்க வேண்டியது தானே.
பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதா என்றால் இல்லை. சுத்தமான காற்று வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கேட்டதற்காக சுட்டுக் கொன்றவர்கள், பொள்ளாச்சி பாலியல் புகாருக்குள்ளானவர்களை என்ன செய்தார்கள் ?”என்று கேட்டார்.