லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் , மணிரத்னத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் தயாரித்து வரும் சரித்திர பிரமாண்ட படைப்பு “பொன்னியின்செல்வன்” . இதன் படபிடிப்பு இந்தியா முழுக்க பல இடங்களில் நடந்தது. கடந்த பல மாதங்களாக ஐதராபாத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடந்தது. இறுதியாக பொள்ளாச்சியில் நடந்த “பொன்னியின்செல்வன்-1” முதல் பாகம் படபிடிப்பு இத்துடன் முடிவடைந்தது என்று நேற்று படக்குழு அறிவித்தது.
“இப்படி ஒரு படம் இனிமே அமையாது..அதை எடுக்கவும் முடியாது.. அதற்கு வாய்ப்பே இல்லை.. இதை இயக்குனர் மணிரத்னம் சாதித்துள்ளார் இப் படத்தை பார்க்க ஆவலோடு உள்ளோம்..”என்று இதில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவருமே சொல்வது படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது இப்படம் வரும் 2022 ம் ஆண்டு வெளியாகிறது.