தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,,. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பொழிந்து வரும் நிலையில், இதன் காரணமாக சென்னை சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது.பல இடங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை 2-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையம் அவர் வழங்கினார்.
இதையடுத்து மழை பாதிப்பு நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.