
வித்தியாசமான தலைப்புக்கு நியாயம் கற்பிக்கிறது திரைப்படத்தின் மைய்ய கருத்து.!
பாலியல் வன்புணர்வுக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் என்பதும் செய்திதான்.! ஆனால் கடுமையான தண்டனை குறித்து தெளிவான தீர்ப்புகள் எதுவும் இல்லை. குற்றம் நிரூபணமாகவில்லை என சொல்லி விடுதலை ஆனதும் உண்டு. அதற்கு இந்தப்படத்தின் பாரதி ஒரு நல்ல சான்று.
சரி,சத்யராஜ் என்ன சொல்கிறார்?
டாக்டர் நலன் குமாராக வருகிற அவர் ஆணுறுப்பை வெட்டியதுடன் தொடர்புடையவர்களை சாமர்த்தியமாக கொலையும் செய்கிறார்.
இவர் தண்டிக்கப்பட்டாரா ?
இல்லை ,மகளுடன் வெளிநாடு சென்று விடுகிறார். இது நியாயமா,நேர்மையா?
எழுத்து இயக்கம் என பொறுப்பு சுமந்திருப்பவர் தீரன் !
பிரபலமான டாக்டர் சத்யராஜ். இவரது மகள் டாக்டர் பாரதி .இவரை முன்னாள் அமைச்சர் மதுசூதனின் மகன் உள்ளிட்ட மூவர் வன்புணர்வு செய்து விடுகிறார்கள்.பாரதியின் காதலர் அவர்களை கடுமையாக தாக்கி விடுகிறார்.
மனம் குமுறிய சத்யராஜ் குற்றம் இழைத்த முன்னாள் அமைச்சரின் மகனது ஆணுறுப்பை வெட்டி துண்டித்து எடுத்து சென்று விடுகிறார்.
துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை குறிப்பிட்ட நேரத்துக்குள் கொணர்ந்தால் இணைக்க முடியும் இல்லையேல் செயற்கையான உறுப்பு பொருத்தலாம் என்கிறார்,டாக்டர் .
இதற்காக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் ,டாக்டர் சத்யராஜ் இருவருக்கும் இடையில் நடப்பதுதான் மீதிக்கதை.
என்ன நிகழ்கிறது என்பதை தொடர் கொலைகள் வழியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் .நீதிபதி அளவில் பணம் விளையாடுகிறது என்பதை திறமையுடன் தணிக்கைக்குழுவுக்குள் வராமல் சொல்லியிருக்கிறார்.!
சரி ,மகளுக்காக நியாயம் கோரி கொலைகள் செய்வது,சட்டத்துக்குள் சிக்காமல் வெளிநாடு தப்பி சென்றது நியாயமா ?
மனுநீதியுடன் பார்க்காமல் மனிதாபிமானத்துடன் இதை அணுகுவதே சரி. டாக்டர் நலன் குமார் மகளுடன் அமெரிக்கா சென்றதில் சட்டப்படி குற்றம் எதுவுமில்லை.பிறகென்ன? அப்படியானால் மற்றவர்களும் இதையே பின் பற்றினால் சட்டம் கேலிக்கூத்தாகாதா ?
நடிப்பை பொருத்து சத்யராஜ் ,முன்னாள் அமைச்சராக வந்த மதுசூதனன் ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில இடங்களில் மதுசூதனன் கடுமையான போட்டியை தந்திருக்கிறார் சத்யராஜ்க்கு !
எஸ்.என் .பிரசாத்தின் இசைக்கருவிகள் புதியவைகளை தரவில்லை.பின்னணி இசையும் சோதனையாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் கருட வேகா ஆஞ்சியின் கேமராவுக்கு கருடப் பார்வை.!
விற்கப்படுகிற தீர்ப்புகளை வாங்கலாமா?
இரண்டாம் பகுதி வருகிறதாம் என்கிறீர்களா? முதல் பாதியே ஏமாற்றம்ங்க .!












